
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (89) நேற்று காலமானார். அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
கடந்த 1988 முதல் 1998-ம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் எம்.எஸ்.ஜனார்த்தனம். தனது பதவிக் காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை அளித்திருந்தார். பின்னர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில நுகர்வோர் ஆணையம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், 2015-ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார்.