
பாட்னா: “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வார்த்தைகள், பாகிஸ்தானின் வார்த்தைகளை ஒத்திருக்கிறது. அவர் தேசத்தை மதிக்கவில்லை” மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், "ராகுல் காந்தி இந்தியாவின் வீரத்தை எதிர்த்தார். அவர் ராணுவத்தின் துணிச்சல் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், உலகளவில் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தார். பிஹார் பொதுமக்கள் அவரை எதிர்ப்பார்கள், ராணுவத்தையோ அல்லது தேசத்தையோ மதிக்காத ஒருவருக்கு அவர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? ராகுல் காந்தியின் நாக்கு, பாகிஸ்தான் போன்றது. அவர் தேசத்தை மதிக்கவில்லை.