• June 6, 2025
  • NewsEditor
  • 0

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB அணி தொடரை வென்றது, கொண்டாட்ட நிகழ்வுகளில் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவங்களால் கரும்புள்ளியாக மாறியுள்ளது.

RCB Celebration

யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர்?

காவல்துறையினர் கூறுவதன்படி, RCB -ன் உயர் மார்க்கெட்டிங் அதிகாரி நிகில் சோசலேவும் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட தயாரானபோது, கைது செய்யப்பட்டுள்ளார்.

சோலே RCB அணியின் அனைத்து விளம்பர நடவடிக்கைகளையும், சமூக வலைத்தள பக்கங்களையும் கையாண்டு வந்துள்ளார். அணி நிர்வாகத்துக்கும் வீரர்களுக்கும் இடையே பாலமாக இருப்பதும் இவர்தானாம்.

இவரைத் தவிர, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெடைச் சேர்ந்த சுனில் மேத்தியூ (துணைத் தலைவர், ஐபிஎல் நிகழ்வுகளைக் கையாள்பவர்), கிரண், சுமந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நெரிசல் நிகழ்வு குறித்து, மரணம் விளைவிக்கும் குற்றம் (கொலைக்கு சமமானதல்ல) பாரதிய நியாய சன்ஹீதாவின் பல பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

KSCA நிர்வாகிகள் தலைமறைவு

நேற்று (05.06.2025) கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, ஆர்.சி.பி, கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் டி.என்.ஏ எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் – தலைமறைவாகியுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

முதல்வர் சித்தராமையா, இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா மற்றும் பல மூத்த காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

பெங்களூரு பெருநகர பணிக்குழுவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல், மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமந்த் குமார் சிங் உடனடி நடவடிக்கையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக விமர்சனம்

கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், பாஜக மரணங்களை வைத்து கேவலமான அரசியல் செய்கிறது என பதிலளித்துள்ளார் சித்தராமையா.

நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அரசு அதிகாரிகள் முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *