• June 5, 2025
  • NewsEditor
  • 0

அரியலூர்: அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற பெயர் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசு போக்குவரத்துக் கழகம் என்றுதான் பெயர் இருந்தது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் என உள்ளது. தமிழ்நாடு என்ற பெயரைக் காணவில்லை என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ம் ஆண்டு ஜெயலலிதா புதிய பேருந்துகளை தொடங்கிவைத்தபோதே அரசுப் போக்குவரத்துக் கழகம் என்றுதான் உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *