
சென்னை: இந்தியாவுக்கான குரலாகத் தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமைமொழியை பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க, எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியது.