
புதுடெல்லி: நிதி நெருக்கடி காரணமாக ஜாமீன் பெறவோ அல்லது சிறையில் இருந்து விடுதலை பெறவோ முடியாத ஏழை கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பயன்படுத்தாதது கவலை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்துறை செயலாளர்கள்/சிறைத்துறை தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.