• June 4, 2025
  • NewsEditor
  • 0

ஐபிஎல்-லில் 17 சீசன்களாகக் கோப்பை வெல்லப் போராடிக்கொண்டிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, தன்னைப் போலவே 17 சீசன்களாக முதல் கோப்பைக்காகப் போராடிக்கொண்டிருந்த பஞ்சாப் அணியை நேற்று அகமதாபாத் மைதானத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆர்.சி.பி ரசிகர்கள் இந்த வெற்றியை நேற்றிரவு முதல் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோப்பையுடன் ஆர்.சி.பி வீரர்கள் மாலை 4 மணியளவில் சட்டமன்றத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி வீரர்களுக்கு சிறப்பு பாராட்டு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தது. அதன்படி, பிற்பகல் 3:30 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் ஆர்.சி.பி வீரர்களைத் துணை டி.கே. சிவக்குமார் நேரில் வரவேற்றார். மறுபக்கம், ஆர்.சி.பி வீரர்களைக் காண சட்டமன்றம் செல்லும் சாலைகளிலும், சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியேயும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில், சின்னசாமி ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சுமார் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சட்டமன்ற வளாகத்தில் ஆர்.சி.பி வீரர்கள் கவுரவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த சோக சம்பவம் தெரியவரவே, உடனடியாக அவர்கள் அவசர அவசரமாக அனுப்பப்பட்டனர்.

முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வரும் டி.கே. சிவகுமாரும் உடனடியாக சட்டமன்றத்திலிருந்து கிளம்பினார்.

இந்த விவகாரத்தில் டி.கே. சிவகுமார், “கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசல். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் உட்பட 5,000-க்கும் மேற்பட்டோரை ஏற்பாடு செய்தோம். ஆனால், இளைஞர்கள் கூட்டம் என்பதால், அவர்கள் மீது தடியடி நடத்த முடியாது” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *