
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி, புதுக்கோட்டையில் மாவட்ட திமுக அலுவலகம் அருகே வைக்கப் பட்டிருந்த ‘மாநகர திமுக போராடும், மாநகர திமுக வெல்லும்’, ‘பரிதவிப்போர் இங்கே, பரிந்துரைத்தவர் எங்கே?’ என்ற வாசகங்களுடன் வைக்கப்பட்ட பேனர் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளராக இருந்த செந்தில் கடந்த ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு அக்கட்சியில் பலரும் முயற்சித்து வந்தனர். இதற்காக பலர் வட்டச் செயலாளர்கள், பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவும் திரட்டினர். இதில், செந்தில் மகன் கணேஷூக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ராஜேஷ் என்பவருக்கு கடந்த மார்ச் மாதம் மாநகர செயலாளர் பொறுப்பை கட்சி தலைமை வழங்கியது.