
ஜம்மு: காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு திரும்பி புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு மெகபூபா முப்தி கூறியதாவது: காஷ்மீர் பண்டிட்கள் அவர்கள் வசித்த பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு திரும்பி வந்து மறுவாழ்வு பெறுவது குறித்த விவகாரத்தில் அதிக கவனத்தை செலுத்த கோரி துணை நிலை ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது தார்மீக கட்டாயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வும்கூட. காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் மீண்டும் அவர்களது வாழ்விடங்களுக்கு திரும்பாமல் எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் முழுமை அடையாது.