• June 3, 2025
  • NewsEditor
  • 0

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழையால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்தால் சுமார் 2.64 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து உள்ளனர்.

வடகிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாமில் 10 பேர், அருணாச்சல பிரதேசத்தில் 9 பேர், மேகாலயாவில் 6 பேர் மிசோரமில் 5 பேர் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய ராணுவம், விமானப் படை, அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *