
இசை அமைப்பாளர் இளையராஜா, தனது 83-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தனர். சிலர் நேரில் சந்தித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முதல்வர் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரை கண்டவர் இளையராஜா. தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழ்கிறார். தமிழ்நாட்டில் இளையராஜாவின் சிம்பொனி இசை, ஆக.2-ல் ஒலிக்க உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாகக் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் இளையராஜாவின் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்” என்று தெரிவித்துள்ளார்.