• June 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் மகா கும்​பமேளா​வின்போது நிறு​வப்​பட்ட திரு​வள்​ளுவர் சிலைக்கு அறி​முக விழா நடத்​தப்​பட்​டது. பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, சென்னை சிஐசிடி​யுடன் இணைந்து இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்​திய விழா​வில் தமிழர்​களான உத்தர பிரதேச மாநில அரசு அதி​காரி​கள் பங்​கேற்​றனர். உ.பி.​யின் பிர​யாக்​ராஜில் மொழிகளை பால​மாக்கி தேச ஒற்​றுமைக்​காக 49 ஆண்​டு​களாக செயல்​படும் பொதுநல அமைப்பு பாஷா சங்​கம்.

இந்த சங்​கம் கடந்த 34 ஆண்​டு​களாக பிர​யாக்​ராஜில் திரு​வள்​ளுவர் சிலை வைக்க வலி​யுறுத்தி வந்​தது. அந்த முயற்​சி​யில் கடந்த 10 ஆண்​டு​களாக இந்து தமிழ் திசை நாளிதழும் தொடர்ந்து செய்​தி​கள்​வெளி​யிட்​டு, பல்​வேறு வகை​களில் உதவியது. இறு​தி​யில் பிர​யாக்​ராஜ் டிஐஜி​யாக நியமிக்​கப்​பட்ட தமிழர் டாக்​டர் என்​.​கொளஞ்சி முயற்​சி​யால், மகா கும்​பமேளா விழா​வின் போது திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *