
சென்னை: அதிமுக ஆட்சி அமைந்ததும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அந்த சாரை முதல்வர் ஸ்டாலினே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துள்ள சென்னை மகளிர் நீதிமன்றம், தண்டனை குறைப்பு எதுவும் வழங்கக் கூடாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.