
‘வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், கல்வி உபகரணங்களை மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கல்வி அலுவலர் கலைச்செல்வம், தலைமை ஆசிரியர் பத்மஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.