• June 2, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ‘உரிமையாளர்’ இன்னும் பொதுப் பணித் துறை பெயரிலேயே உள்ளதால் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 16 மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கால்வாய்களை தங்கள் பெயருக்கு எழுதி தர மாநகராட்சி கடிதம் எழுதி ஓர் ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் பொதுப் பணித் துறை பதில் அளிக்காமல் உள்ளதால், கால்வாய்களை பராமரிப்பு 16 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி 100 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 16 மழைநீர் கால்வாய்கள் 44.23 கி.மீ. தூரம் செல்கின்றன. இந்த கால்வாய்கள் அனைத்தும் பொதுப் பணித் துறை வசம் உள்ளன. கடந்த 50 ஆண்டுக்கு முன்பு வரை, இந்த கால்வாய்கள் அனைத்தும், பாசன கால்வாய்களாக இருந்துள்ளன. இந்த கால்வாய்களை கொண்டு தற்போது அறியப்படும் மாநகரப் பகுதியில் இருந்த 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிப் பெற்றன. நெல், வாழை, கரும்பு, காய்கறி போன்ற பல்வேறு விவசாயப் பணிகள் நடந்து வந்தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *