
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாளை விளையாடுகின்றன. இந்நிலையில், இதில் யார் தோற்றாலும் ஹார்ட் பிரேக் நமக்கு தான் என இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர், “பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர், மும்பையின் பும்ரா மற்றும் போல்ட் வீசிய யார்க்கர்களை தேர்ட்மேன் திசையில் பவுண்டரி விளாசியது அருமை. அவர் டெல்லி அணியை முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். இருப்பினும் அந்த அணி அவரை தக்க வைக்கவில்லை.