
நாகர்கோவில்: குமரி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கன்டெய்னரில் இருந்து பொருட்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 36 கடற்கரை கிராமங்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி மூழ்கியது. 640 கன்டெய்னர்களில் இருந்தவை, பல கடல் பகுதிகளில் மிதந்தும், கரையொதுங்கியும் வருகிறது. இதில் ஒரு கன்டெய்னர் குமரி மாவட்டம் வாணியக்குடி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த கன்டெய்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அதிலிருந்த பொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது.