
விழுப்புரம்: “பாமகவில் அனைத்து அதிகாரங்களும் கட்சியின் நிறுவனர் ராமதாசிடம் மட்டுமே உள்ளது” என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸை, பேராசிரியர் தீரன் இன்று (ஜூன் 2) சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பாமக மகளிர் மாநாடு, பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்படும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். பாமக தலைவராக ஒரு எம்பிசி வகுப்பை சேர்ந்தவரும், பொதுச் செயலாளராக ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவரும், பொருளாளராக சிறுபான்மையினரும் இருக்க வேண்டும் என்பது பாமக கட்சியின் சட்ட விதிகளாகும்.