• June 1, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதை முதல் வேலையாக வைத்துள்ளனர்.

சி.பி ராதாகிருஷ்ணன்

நக்சலைட்டுகளால் முன்னாள் அமைச்சர் கொலை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அர்பன் நக்சலைட்கள் எங்கும் பரவி வருகிறார்கள். இது தேச பக்தர்களின் நலனுக்கு எதிரானது. நாட்டில் தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். 

மத்திய அரசு தமிழகத்துக்கு எவ்வளவு தந்தாலும் அதைப் போற்றுவதற்கு சிலருக்கு மனம் இல்லை. தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழகத்தின் ஆளுநர் நேர்மையானவர்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

அவரது கடமைகளைச் சிறப்புடன் செய்கிறார். மாநில அரசு அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு என்றால், மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா. இதுவரை இல்லாத ஒரு மொழிபெயர்ப்பை தற்போது கொண்டு வருகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் என்றைக்காவது ஒன்றை ஒழுங்காகக் கூறியுள்ளாரா? திமுகவை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று கட்சி தொடங்கினார். ஆனால் தற்போது திமுகவுடன் இருப்பதுதான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்கிறார். அவருக்கு எது நன்மை பயக்கிறதோ, அதை தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்று நினைப்பவரைப் பற்றி நான் என்ன கூற முடியும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமல்ஹாசன் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார். சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் மொழி வந்தது என்று கூறினால் ஏற்றுக் கொள்வோமா?” என கேள்வி எழுப்பினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *