• May 30, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசும்​போது, “தமிழில் இருந்து பிறந்​தது​தான் கன்​னடம்​”என குறிப்​பிட்​டார். இதற்கு கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா மற்றும் கன்னட அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று பெங்​களூரு​வில் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் நடிகர் சிவ​ராஜ் குமார் பேசி​ய​தாவது:கன்னட மொழி மீதும் பெங்​களூரு மாநகரின் மீதும் கமல்​ஹாசன் மிகுந்த மதிப்பு கொண்​டிருக்​கிறார். நான் அவருடைய பெரிய ரசிகன். இந்தவிவ​காரம் குறித்து 100 சதவீதம் உரிய விளக்​கத்தை கொடுப்​பார். கன்னட மொழி​யின் மீதான‌ பாசம் என்​பது வாழ்க்கை முழு​வதும் இருக்க வேண்​டும். எங்கு சென்​றாலும் கன்​னடத்தை நேசிக்க வேண்​டும். கேமரா முன்​பாக மட்​டும் நேசிக்க கூடாது. வெறும் பேச்​சுக்​காக கன்னட பாசத்தை கேமரா முன்​பாக காட்ட கூடாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *