
சென்னை: நகராட்சி நிர்வாக துறை சார்பில் ரூ.572 கோடி திட்டங்கள், நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.499 கோடி திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்புகளில் கூறியிருப்பதாவது: தமிழக நகராட்சி நிர்வாக துறையின்கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.30.60 கோடியில் 11 முடிவுற்ற பணிகள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் ரூ.188.55 கோடியில் 3 முடிவுற்ற பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.102.59 கோடியில் 19 முடிவுற்ற பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகம் சார்பில் ரூ.77.07 கோடியில் 14 முடிவுற்ற பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.60.58 கோடியில் முடிவுற்ற 2 கூட்டு குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.