
விருதுநகர்: விருதுநகரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் நான்குவழிச் சாலையில் அமர்ந்து இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குவாலியரை தலைமையிடமாகக் கொண்ட பரிவார் டெய்ரிஸ் அன்டு அலைடு லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் கிளை விருதுநகர் மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வந்தது. இந்நிறுவனத்தில், பொதுமக்கள் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக அறிவிப்புகள் வெளியிடப் பட்டன.