
சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் காட்டங்குளத்தூர் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று (மே 27) காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.28 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் -செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.