
மதுரை: நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படாமல் அவமதிப்பு வழக்குகள் அதிகரித்து வருவதால் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தியாக உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றாமல் இருப்பதால் வழக்கு தொடர்ந்தவர்கள் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்கின்றனர்.