
கோவை: கோவை மாவட்டத்தில் மழை நின்ற பின் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து பல்வேறு பகுதிகளில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். மாலை 3 மணிக்கு பேரூர் செல்வசிந்தாமணி குளம், ஆண்டிபாளையத்தில் உள்ள கோவை அணைக்கட்டு, புட்டுவிக்கி சாலை, மதுக்கரை பிச்சனூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார்.