• May 26, 2025
  • NewsEditor
  • 0

மதுரையில் திமுக-அதிமுக நிர்வாகிகள் இடையே தேர்தல் பணியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இருதரப்பினரும் கட்சியினருக்கு பரிசுகளை வழங்கி ஊக்கத் தொகைகளையும் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபிறகு கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திமுக-வுக்கு இணையாக அதிமுக 5 தொகுதிகளை கைப்பற்றியது. மாநகர் பகுதியில் திமுகவும், புறநகர் பகுதியில் அதிமுகவும் செல்வாக்கு காட்டின. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ள நிலையில் மாநகர் பகுதியில் திமுக பலவீனமாக உள்ளதாகவும், புறநகர் பகுதியில் திமுக பலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே மாநகர் பகுதியில் மதுரை மேற்கு தொகுதி, அமைச்சர் பி.மூர்த்தி வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *