
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு நேர்மையற்றது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், ஜெயா பச்சன், தயாநிதி மாறன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை குறித்தும் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.