
ஊட்டி: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 353 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்வதால் சுற்றுலா தலங்கள் இன்றும் மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் (திங்கட்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, பைன்பாரஸ்ட், அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன. இதனால் ஏற்கெனவே அறை முன்பதிவு செய்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் தங்கும் விடுதிகளில் இருந்தனர்.