• May 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தானுக்கு வழங்க வழிவகுத்த முடிவுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், அவரது தந்தை ஜவஹர்லால் நேருவுமே பொறுப்பு என்று குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு 1963 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட தந்தியை பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே மேற்கோள் காட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1948-ம் ஆண்டு பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பிறகு, இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியும், அவரது தந்தை நேருவும் அதிகாரத்தில் இருந்தபோது மீண்டும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் மத்தியஸ்த அழுத்தத்தின் கீழ், 1962 மற்றும் 1964-க்கு இடையில் இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஸ்வரன் சிங்குக்கும், பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும் இடையே தொடர்ச்சியான சந்திப்புகள் நடைபெற்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *