
புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தியபோது அதனை கடுமையாக எதிர்த்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அதற்கான அனைத்துப் பெருமைகளையும் தனதாக்கிக்கொள்வதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர்கள், துணை முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 20 முதல்வர்கள், 18 துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.