
புதுக்கோட்டை: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து குற்றச் செயல்களுக்கும் காரணமாக போதைப் பொருள் உள்ளது. போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீரழிகின்றனர். இந்தியாவில் போதைப்பொருள் அதிகம் விற்பனை செய்யப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சிந்தடிக் டிரக் அதிகமாக புழக்கத்தில் இருந்தபோதும், இதுவரை ஒரு கிராம்கூட பறிமுதல் செய்யப்படவில்லை.