
சென்னை: வட சென்னை, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர், கொடுங்கையூரில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட பழைய குப்பைகளை அகழ்ந்தெடுத்து மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு சுற்றுச்சூழல் பூங்கா வரும் என அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.