
‘இது வெயில் காலமா… மழைக் காலமா?’ என்று குழப்புவது போல, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களின் மே மாதத்தைக் குளிர்வித்து வருகிறது கோடை மழை.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதைத் தெரிவித்துள்ளது தென் மண்டல இந்திய வானிலை மையம்.
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.
தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
இந்த மழை இன்று காலை 10 மணி வரை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கலாம். சாலைகள் வழுக்கலாம். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY