
‘‘தீவிரவாத தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானுக்கு கடந்த 2015-ல் இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது’’ என பதன்கோட் தாக்குதலை அமெரிக்காவில் இந்திய குழுவுக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர் நினைவுபடுத்தினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக நடைபெற்ற போர் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது.