
சென்னை: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது அவர் கூறியுள்ளதாவது: நகை கடன் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது என்றும் இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பல்வேறு விதமான கருத்துகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.