
சிவகாசி: சிவகாசி அருகே எஸ்.அம்மாபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது.
சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி(40). இவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) அனுமதி பெற்று மாரனேரி அருகே எஸ்.அம்மாபட்டியில் கனேஷ்வரி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.