• May 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்தியா தற்போது ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

10வது நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியம் கூறியதாவது: நான் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு. நாம் இப்போது 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துள்ளோம். இது எனது தரவுகள் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள். இந்தியா இப்போது ஜப்பானை விட பெரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *