
புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் வாராணாசியில் ஏழு தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் முகலாய ஓவியம் வரைகின்றனர். இவர்களின் வாரிசான இளைஞர் அங்கித் பிரசாத் அணில், தன் 5 வயதிலேயே ஓவியங்களை வரையத் துவங்கி உள்ளார்.
உ.பியின் புனிதத் தலமான வாராணாசியின் லங்கா பகுதி. இங்கு கடந்த ஏழு தலைமுறைகளாக முகலாய ஓவிய பாணியை முன்னெடுத்து வரும் ஒரே குடும்பம் வசிக்கிறது. இதன் வாரிசான இளைஞர் அங்கித் பிரசாத் அணில், தனது ஐந்து வயது முதல் இந்த முகலாய ஓவியத்தை தம் மூதாதையர்களிடம் இருந்து கற்றுள்ளார்.