
நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘மாமன்’. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திரைப்படங்களைத் திருட்டு பதிவிறக்கம் செய்து பார்ப்பது உள்ளத்தைச் சிதைக்கிறது என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. ஒவ்வொரு படத்துக்கு பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன. ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல.