• May 25, 2025
  • NewsEditor
  • 0

சினிமா தொடங்​கிய ஆரம்ப காலகட்​டத்​தில் புராண மற்​றும் பக்​திக் கதைகளே அதி​கம் படமாக்கப்​பட்​டன. அந்​தப் படங்​களுக்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்து அது​போன்ற படங்​கள் அதி​க​மாக உரு​வாகின. அதில் மகா​பாரதத்​தின் கிளைக் கதைகளில் ஒன்றை எடுத்து உரு​வான படம், ‘கி​ராதா அர்​ஜு​னா’. இந்​தப் படத்​துக்கு ‘ஊர்​வசி சாகசம்’ என்று இன்​னொரு தலைப்​பை​யும் வைத்​தனர். இரண்டு தலைப்​பு​களு​டன் வெளி​யான படம் இது. அந்த கால​கட்​டத்​தில் சில படங்​கள் இரண்டு தலைப்​பு​களு​டன் வெளி​யாகி இருக்​கின்​றன.

அர்ச்​சுனன் தன்​மீது வைத்​திருக்​கும் பக்​தி​யை, பார்​வதி தேவிக்கு உணர்த்த விரும்​பிய சிவன், அர்ச்​சுனன் வேட்​டை​யாடிக் கொண்​டிருந்த போது, கிராதா என்ற வேட​னாக அங்கு செல்​கிறார். அப்​போது காட்​டுப் பன்றி ஒன்று அர்ச்சுனனை நோக்​கிப் பாய்ந்து வரு​வதைக் கண்ட வில் வீர​ரான அவர், அதை நோக்கி ஓர் அம்பு எய்​கிறார். கிரா​தா​வும் அம்பு எய்ய, காட்​டுப் பன்றி இறக்​கிறது. காட்​டுப்​பன்றி உரு​வத்​தில் வந்​தது, மூகாசுரன் என்ற அசுரன். காட்​டுப்​பன்றி இறந்​ததும் அசுரன் தன் சுய உரு​வத்​தைப் பெறுகிறான். இதற்​கிடையே பன்​றியைக் கொன்​றது யார் என கிரா​தாவுக்​கும் அர்ச்​சுனனுக்​கும் மோதல் ஏற்​படு​கிறது. இறு​தி​யில் கிராதா வெற்றி பெறுகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *