
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.