
துப்பாக்கியை காட்டி அரசு அதிகாரியை மிரட்டிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பரன் மாவட்டம், அன்டா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக (எம்எல்ஏ) குன்வர்லால் மீனா இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசு அதிகாரியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக மீனா மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ம் தேதி உறுதி செய்தது.