
ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் கட்சியின் அவை தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் ஈரோடு பரிமளம் மகாலில் ஜூன் 22-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.