
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தீரமாக போரிட்டு வருகிறது என்று எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க 7 எம்பிக்கள் குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழுவில் தேஜஸ்வி சூர்யா, சுஷாங்க் மணி திரிபாதி, சாம்பவி சவுத்ரி, பாலயோகி, மிலிந்த் தியோரா, ஷர்பாஸ் அகமது ஆகிய எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி தரண்ஜித் சிங் சாந்துவும் குழுவில் உள்ளார்.