• May 24, 2025
  • NewsEditor
  • 0

வேலூர் திமுக-வில், கதிர் ஆனந்த் எம்பி, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாநகரச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான கார்த்திகேயன் என ஆளுக்கொரு பக்கமாக முக்கோண அரசியல் நடத்துபவர்கள். இவர்கள் மூவரும் தங்களது ஆதரவாளர்களை சந்தோசப்படுத்த தங்கள் செலவில் அவர்களை இன்பச்சுற்றுலா இட்டுச் செல்வது தான் இப்போது வேலூர் திமுக-வில் குளுகுளு பேச்சாக இருக்கிறது.

இந்த ஆண்டு மட்​டுமல்​ல… கடந்த சில ஆண்​டு​களாகவே இந்த மூவ​ரும் மாவட்ட திமுக-​வினரை கோடை தவறாமல் குளுகுளு சுற்​றுலா அழைத்​துச் செல்​வதை வழக்​க​மாக வைத்​திருக்​கி​றார்​கள். கழகத்​தினருக்கு இந்த பேக்​கேஜ் சிஸ்​டத்தை முதன்​முதலில் அறி​முகம் செய்து வைத்​தவர் மத்​திய மாவட்​டச் செய​லா​ளர் நந்​தகு​மார் தான். அவரைப் பார்த்து மற்​றவர்​களும் தங்​களது விசு​வாசிகளை குஷிப்​படுத்த இதை அமல்​படுத்த ஆரம்​பித்​து​விட்​டார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *