
சென்னை: பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாககுழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதில் பங்கேற்கிறார்.