
பஹல்காம்: பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு மாதம் ஆகியும், பஹல்காம் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.
பீட்டாப் பள்ளத்தாக்கு முதல் பாபி ஹட் வரை பஹல்காமில் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஒரு மாதம் முன்பு வரை இந்த சுற்றுலாத் தலங்கள் பரபரப்பாகக் காணப்பட்டன. ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.