
புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசி்ன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்பதால் தமிழகத்துக்கான நிதியை ஒதுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக்கூறி, கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைப்பின் நிர்வாகியான வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.