
அக்னூர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பெண்களின் பங்கு குறித்து எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) டிஐஜி வரீந்தர் தத்தா பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நாங்கள் எதற்கும் தயாராக இருந்தோம். அக்னூரில் எதிரிகள் எங்கள் நிலைகளை தாக்கத் தொடங்கியவுடன், நாங்கள் கடுமையான தாக்குதல் நடத்தி, அவர்களின் எட்டு நிலைகளை அழித்தோம். அவர்களின் வான்வழி கண்காணிப்பு அமைப்பையும் ஒரு ஏவுதளத்தையும் அழித்தோம்.