
புதுடெல்லி: டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வெப்பத்தில் தகித்து வந்த டெல்லி-என்சிஆர் பகுதிகளில் புழுதி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மழை பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
நீண்ட நாட்களாக டெல்லியில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழையால் ரம்மியமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலத்த காற்று வீசி வருவதால் நொய்டாவுக்கு அருகே உள்ள பகுதிகளில் மரங்கள் வேருடன் பெயர்ந்து சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது விழுந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.