• May 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்​லி, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் கனமழை காரண​மாக மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த சில வாரங்​களாக வெப்​பத்​தில் தகித்து வந்த டெல்​லி-என்​சிஆர் பகு​தி​களில் புழுதி காற்​றுடன் ஆலங்​கட்டி மழை பெய்​தது. மழை பாதிப்​பால் இரு​வர் உயி​ரிழந்​தனர். 11 பேர் காயமடைந்​தனர்.

நீண்ட நாட்​களாக டெல்​லி​யில் வெப்​பம் அதி​கரித்து வந்த நிலை​யில், தற்​போது பெய்​துள்ள மழை​யால் ரம்​மிய​மான சூழல் நில​வுவ​தால் பொது​மக்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். பலத்த காற்று வீசி வரு​வ​தால் நொய்​டாவுக்கு அருகே உள்ள பகு​தி​களில் மரங்​கள் வேருடன் பெயர்ந்து சாலைகளில் நிறுத்​தப்​பட்​டிருந்த வாக​னங்​களின் மீது விழுந்​தது. இதனால், பல இடங்​களில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. அத்​துடன் மின் இணைப்​பு​களும் துண்​டிக்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *